Tuesday, 2 April 2024

பம்பாய் ஜெய்ஸ்ரீ - 5

 


நாங்கள் தனி அறைக்கு சென்றோம், அங்கே உணவு ஆர்டர் செய்தோம், எனக்கு பொது இடத்தில், இந்த பெண்மை உணர்வை பற்றி பேச தயக்கமாக இருந்தது,அவர் என்னிடம், நீ கவலை படாதே, இங்கே இருப்பவர்களுக்கு தமிழ் தெரியாது. அப்படியே நாம் பேசுவதை கேட்டாலும் ஒன்றும் பிரச்னை இல்லை என்றார். யாரும் எதுவும் செய்ய போவதில்லை என்றார்.  எனக்கு மிகவும் பிடித்து விட்டது அவரை. எப்போது என்னுடன் வந்து தங்க போகிறாய் என்றார். 

என் வீடு உரிமையாளரிடம் பேச வேண்டும். அவர் சம்மதம் தெரிவித்ததும் நான் வருகிறேன் என்றேன். அவர் உடனடியாக என்னை என் வீடு உரிமையாளரிடம் அழைத்து சென்றார். இருவரும் ஹிந்தியில் பேசினார்கள், எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. என் வீடு உரிமையாளர், ஒரு 10000 ருபாய் பெற்று கொண்டார் பாலாவிடம் இருந்து. உடனடியாக எனது உடமைகளை எடுத்து பாலாவின் வீட்டிற்கு வந்தோம். என்னால் பொறுக்க முடியவில்லை. 

உடனடியாக புடவை அணிந்து வா, நான் உன் கழுத்தில் தாலி காட்டுகிறேன், இன்றே நமக்கு முதல் இரவு என்றார். என்ன இவ்ளோ வேகமாக இருக்கிறார் என்று யோசித்தேன். எனக்கு யோசிக்க கூட நேரம் இல்லை, அவர் சொல்வதை உடனடியாக பின்பற்ற தொடங்கினேன். என்னிடம் இருந்த அழகான புடவை மற்றும் அதற்கு ஏற்ற பிளவுசு மற்றும் உள்ளாடைகள் அணிந்தேன், என்னால் முடிந்த அலங்காரம் செய்து கொண்டேன். அவரும் புது மாப்பிள்ளை போல தயார் ஆனார். இந்த படத்தில் இருப்பது போல இருந்தோம். என் கழுத்தில் தாலி கட்டினார்.

தொடரும்.....


2 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. பாலா திருமதி ஜெய் தம்பதியர் வாழ்க்கை பயணம் தெடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

The Dream I have every night

  Credits : Pottachi Priyanka To wake up as a complete woman once someday To wake up in the arms of the man I love The man who loves me, Dom...