Sunday, 31 March 2024

பம்பாய் ஜெயஸ்ரீ - 1

 


என் பெயர் ஜெயக்குமார் வயசு 25 . நான் மற்ற ஆண்கள் மாதிரி இல்லை. எனக்கு பெண்கள் உடை அணிய மிகவும் பிடிக்கும். அப்பா பெரிய இடத்தில பெரிய பதவியில் உள்ளார்.  நான் ஒருவழியாக படித்து முடித்துவிட்டேன். ஆனால், எனக்கு பெண்ணாக வாழ பிடிக்கும். பெண்ணை போல உடை அணிந்து செல்ல ஆசை. ஆனால் சென்னையில் என்னால் அவ்வாறு செய்ய முடியாது, எனவே துபாய் செல்லலாம் என முடிவு எடுத்தேன்.


ஆனால் அங்கே இன்னும் சட்டங்கள் கடுமையாக இருக்கும் என்று எனக்கு தெரியாது. அங்கே இது போல செய்தால் ஒரு ஆண்டு வரை சிறையில் அடைப்பார்கள் என்று எனக்கு தெரியாது. அதனால் மனதை மாற்றிக்கொண்டு பம்பாய்க்கு சென்றேன். அங்கே ஒரு வேலை தேடினேன். தங்க ஒரு இடமும் எடுத்தேன். அங்கே வாடகை அதிகம் இருந்தாலும், எனக்கு பிடித்தார் போல இருக்கலாம் என்று முடிவு எடுத்தேன்.


இங்க ஒரு மாதம் நன்றாக வேலை செய்து கொஞ்சம் பணம் சேர்த்தேன் நான் சேர்த்த பணத்தில் எனக்கு தேவையான பெண் உடைகள் வாங்கினேன். தலை முடி விக் வாங்கினேன். எனக்கு மீசை தாடி சுத்தமாக பிடிக்காது, எனவே அவற்றை அகற்றினேன். பின்னர் கொஞ்சம் அலங்காரம் செய்து கொண்டேன். கண்ணாடி முன்னாடி பொய் நின்றேன், என்னை நானே பார்த்து வியந்தேன். ஜெயக்குமார் ஜெய்ஸ்ரீ ஆக மாறினால். நான் வெறும் ஜெய்ஸ்ரீ இல்லை, பம்பாய் ஜெய்ஸ்ரீ.


தொடரும்....

No comments:

Post a Comment

Travelling outside wearing Ladies inners

  This confession seems quite possible for most of us provided we have a set of bra and panty. We need to wear them before wearing our shirt...