Friday 5 July 2024

நெருக்கம் -1

 


என் பெயர் கார்த்தி. என் வயது இருபத்தி மூணு. நான் ஒரு தனியார் அலுவலகத்தில் பணி செய்து கொண்டு இருக்கிறேன். எனக்கு வாழ்க்கையை பொருத்த வரை பெரிய எதிர்பார்ப்பு இல்லை. நான் ஒரு சாதாரண வாழ்க்கை வாழவே ஆசை பட்டேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே பெண்கள் உடை அணிவது என்றால் மிகுந்த விருப்பம். எனக்கு ஒரு அக்கா இருக்கிறாள் அவள் பெயர் ஜானகி. அவளுடைய உடைகள் என்றாள் மிகவும் பிடிக்கும். அவளுக்கு தெரியாமல் பல முறை அவள் துணிகளை அணிந்து உள்ளேன். 

அவள் என்னை விட மூன்று வயது மூத்தவள். ஆனால் நான் என் உடலை அவள் உடல் வடிவத்தில் வெய்து கொண்டேன், அப்போது தான் அவள் உடைகள் எனக்கு பொருந்தும் என்பதால். அவளுக்கு திருமணம் நடந்தது. அவள் சில ஆடைகளை மட்டுமே புகுந்த வீட்டுக்கு எடுத்து சென்றாள். மீதம் உள்ள ஆடைகள் எனக்கு தான் என முடிவு செய்து கொண்டேன். அன்று முதல் அவள் அறையில் தங்கி கொண்டேன். தூங்கும் போது அவள் உடையை அணிந்து கொண்டு தான் தூங்குவேன். 

அந்த அறையின் தாள் போட்ட பிறகு தான், அவள் உடையை அணிந்து கொள்ளுவேன். ஒரு சில நாட்கள் அவள் உடைய ஆபரணங்களை அணிந்து கொள்வேன். அது மட்டும் அல்லாது, முழு பெண் தோற்றத்தில் இருந்து கொள்வேன். வீட்டில் அம்மா அப்பா இல்லை என்றாள், பெண் உடையில் தான் இருப்பேன். அம்மா அப்பா வீட்டில் இல்லை என்ற நாட்களில், வீட்டில் இருந்தே பணி செய்யும் முறையை கை ஆளுவேன். அப்போது தான் எனக்கு நிம்மதியாக பெண் தோற்றத்தில் இயங்க முடியும். அந்த உடை அணிவது எனக்கு மிகுந்த அமைதி தரும். 

எவ்வளோ பெரிய கவலையில் இருந்தாலும் மறந்து விடும். என் மாமா அதாவது அக்காவின் கணவரை பற்றி சொல்ல வேண்டும். அவர் மிகவும் அருமையான மனிதர். என் அக்காவை காட்டிலும் அழகாணவர். நானும் என் அக்காவை விட கொஞ்சம் சிகப்பு நிறத்தில் உள்ளவன். என் மாமா என்னை அடிக்கடி கிண்டல் செய்வார், நீ மட்டும் பெண்ணாக பிறந்து இருந்தால் உன் அக்கா உடன் உன்னையும் திருமணம் செய்து இருப்பேன் என்றார். எனக்கு வெட்கமாக இருந்தது ஆனால் நான் வெளியில் காட்டி கொள்ள வில்லை. ஆனாலும் என்னை அறியாமலே என் அத்தான் மீது ஒரு விதமான ஈர்ப்பு வந்தது.

தொடரும்........



No comments:

Post a Comment

Don't worry about me

  Credits : Jasmine Sissy - Instagram Mom : Me and your dad will have to go out of town for a wedding, will you be able to manage alone in t...