அன்று இரவு உறங்க சென்றேன். எனக்குள்ளே மனக்குழப்பம், ஒரு வேலை நாம் தேடி கொண்டிருக்கும் ஆள் இவர் தானோ என்று. நான் கொஞ்சம் நேரம் கழித்து, எனது முகநூல் கணக்கை திறந்தேன். ஆனால் அவர் அப்போது இல்லை. சரி நாம் இன்று வேலைக்கு போய்விட்டு வந்து பின்னர் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். அன்று முழுவதும் அவர் நினைவே. வீட்டிற்கு வந்த உடன் கணக்கை திறந்தேன்.
அவரிடம் இருந்து நிறைய குறுஞ்செய்தி வந்தது, நலமா அது இது என்று. அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு எலக்ட்ரிகல் துறையில் பணியில் உள்ளார். அவர் வயது 35 . மூன்று பிள்ளைகள், சொந்த ஊர் திருச்சி, இங்கே நல்ல வேலை நல்ல சம்பளம் என்பதால் தங்கி உள்ளார். அவரின் குடும்பம் சொந்த ஊரில் உள்ளார்கள், ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை ஊருக்கு சென்றுவிட்டு வருவார், மற்ற நேரமெல்லாம் இங்கே தான்.
அவருக்கு ஒரு துணை தேவை படுகிறது என்றார். ஆனால் இன்னொரு பெண் இருந்தால், அது கடினம். ஆண் தான் வேணும், ஆனால் முழு ஆண் வேண்டாம், பெண்மை உணர்வு கொண்ட ஆண் தான் வேணும் என்றார். உங்கள் கணக்கை பார்த்தால், நீங்கள் அப்படி பட்ட ஒரு ஆண் தான் என்று தெரிகிறது, நீங்கள் விருப்பம் இருந்தால் சொல்லுங்கள், நாம் இருவரும் ஒரே வீட்டில் தங்கலாம், நீங்கள் பெண்ணாகவும், நான் உங்கள் ஆணாகவும் என்றார்.
தொடரும்...
No comments:
Post a Comment